2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கிரானில் பொதுச்சந்தை திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2017 மார்ச் 19 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கிரான் பகுதியில் புதிதாக  அமைக்கப்பட்ட பொதுச்சந்தையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட  14 பேருக்கு  முன்னுரிமை  அளிக்கப்பட்டு கடைகள் வழங்கப்பட்டுள்ளன என அப்பிரதேச  சபைச்; செயலாளர்  எஸ்.எம்.ஷிஹாப்தீன் தெரிவித்தார்.

15 மில்லியன் ரூபாய் செலவில் 14 கடைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்ட இச்சந்தைக்கான திறப்பு விழா,  இன்று (19)  நடைபெற்றது.

இந்தக் கடைகளைப் பெற்றுக்கொண்டவர்களில் குடும்பங்களைத் தலைமை தாங்கும் 9 பெண்களும் யுத்தத்தால் அங்கவீனமான  2 பேரும் அடங்குகின்றனர் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .