Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Gavitha / 2016 ஜனவரி 05 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல்
மட்டுப்படுத்தப்பட்ட போரத்தீவுப் பற்று பிரதேச கால் நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம் இவ்வரும் அப்பகுதி பண்ணையாளர்களின் நலன்கருதி பல்வேறுபட்ட வாழ்வாதார ரீதியான செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் தெரிவித்துள்ளார்.
போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள கால்நடை பண்ணையாளர்களிடமிருந்து பயனாளிகளைத் தெரிவு செய்யும், கூட்டம் திங்கட்கிழமை (04) தும்பங்கேணி பால் பதனிடும் நிலையத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு, பண்ணையாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்துடன் இணைந்து, தும்பங்கேளி கால்நடை வைத்திய அலுவலகத்தின் ஆதரவுடன் இச்செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
'இப்பிரதேத்திலிருந்து தெரிவு செய்யப்படும் 15 பேருக்கு, நல்லின ஆட்டுக் கடா வழங்குதல், 3 பேருக்கு மாட்டுச் சாணத்தில் எரிவாயு தயாரிக்கும் இயந்திரம் வழங்குதல், 10 பேருக்கு மாட்டுக் கொட்டில் வழங்குதல், 3 பேருக்கு புல் வெட்டும் இயந்திரம் வழங்குதல், 2 பேருக்கு இறைச்சி விற்பனை செய்யக்கூடிய குளிர்சாதனப் பெட்டிகள் வழங்குதல், 2 பேருக்கு பால் கறங்கும் இயந்திரம் வழங்குதல், 10 பேருக்கு எருமை மாடு வளர்ப்புக் கொட்டில் வழங்குதல், 10 பேருக்கு ஆட்டுக் கொட்டில் வழங்குதல், 3 பேருக்கு கோழிக்குஞ்சு பொரிக்கும் இயந்திரம் வழங்குதல், 10 பேருக்கு நல்லின இனவிருத்திக் காளைகள் வழங்குதல் போன்ற பல உதவித் திட்டங்கள் வழங்கப்படவுள்ளன' என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த உதவிகள் யாவும் அரைவாசி மானிய விலைக்கழிவுடன் கால்நடைப் பண்ணையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், இவ்வுதவிகளைப் பெற்று இப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் வாழ்வாதார ரீதியாக முன்னேற்றம் காணவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago