2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கிழக்குப் பல்கலைக்கு புதிய உபவேந்தர்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 22 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராக  கலாநிதி தங்கமுத்து ஜயசிங்க தெரிவுசெய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமை அவருக்கான நியமனம் வழங்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபேயகோனினால்; இந்த நியமனம் வழங்கிவைக்கப்பட்டது.  
கடந்த  வருடம்  டிசெம்பர் 12ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வந்தாறுமூலை வளாகத்தில் இடம்பெற்ற கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்தில்  மேற்படி உபவேந்தர் நியமனத்துக்காக மூவரின் பெயர்கள்; முன்மொழியப்பட்டன.

இதன்போது இடம்பெற்ற வாக்கெடுப்பின் அடிப்படையில் தாவரவியல், விஞ்ஞானபீட சிரேஷ்ட விரிவுரையாளரும்; சட்டத்தரணியுமான கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் முதலாவது இடத்திலும் தாவரவியல்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்திரா மகேந்திரநாதன் இரண்டாவது இடத்திலும் விவசாயபீட பீடாதிபதி கலாநிதி பி.சிவராஜா மூன்றாவது இடத்திலும் முன்மொழியப்பட்டனர்.

இதன் பிரகாரம் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களின் வாக்களிப்பு முடிவுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பின்னர் உபவேந்தர் இறுதி நியமனம் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய உபவேந்தர் நியமனம் மூன்றாண்டுகளைக் கொண்டதாகும்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக ஏற்கெனவே  கடமையாற்றிய உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜாவின் பதவிக்காலம் வறிதானதையடுத்து, அப்பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் உமா குமாரசாமி கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையிலேயே மேற்படி புதிய நியமனம் வழங்கப்பட்டது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X