2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு பல்கலை மாணவ குழுக்களுக்கிடையில் கைகலப்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்தில் இரண்டு மாணவக் குழுக்களுக்கிடையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கைகலப்பைத் தொடர்ந்து அப்பல்கலைக்கழகம் காலவரையறையின்றி; மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதில் பதிவாளர் ஏ.பகிரதன் தெரிவித்தார்
 
கலைப்பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் இந்தக் கைகலப்பு இடம்பெற்றது.  இதன்போது பாதிக்கப்பட்ட 06 மாணவிகள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  
 
பல்கலைக்கழகத்தின் விரிவுரைகள் மறு அறிவித்தல்வரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் விடுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென்றும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X