2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பத்தனை விபத்தில் காயமடைந்தவரும் மரணம்

Janu   / 2025 டிசெம்பர் 21 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் திம்புள்ள பத்தனை சந்தி பகுதியில் சனிக்கிழமை (20) அன்று காலை 7.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

லிந்துலை கவுலினா பகுதியை சேர்ந்த 21 வயதுடைய ரகீம் மற்றும்  பெய்திலியை சேர்ந்த செல்லத்தம்பி என்ற இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

டயகம பிரதேசத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து தேநீர் குடிப்பதற்காக பத்தனை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் தேநீர் குடிப்பதற்காக பேருந்திலிருந்து இறங்கி சென்ற இருவர் மீது எதிர் திசையிலிருந்து வேகமாக பயணித்த லொறியொன்று மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளங்கன்- டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

நாத்தாண்டிய பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற லொறி மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.லொறியின் சாரதி திம்புள்ள பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள  பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X