Suganthini Ratnam / 2016 ஜூன் 23 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மியான்குளம் கிராமத்தில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை இன்று வியாழக்கிழமை முற்றுகையிட்டுள்ளதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் சிரேஷ்ட மதுவரித் திணைக்கள அதிகாரி நடராஜா சுசாதரன் தெரிவித்தார்.
இந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் சுற்றிவளைத்து முற்றுகையிட்டபோது, பெருமளவான கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கான பொருட்களையும் கைபற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025