2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Princiya Dixci   / 2021 ஜூன் 14 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

போதைப்பொருள் கடத்தல், விற்பனை, உற்பத்தியைத் தடுக்கும் வகையில், மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்களத்தால் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த மூன்று தினங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் , களுவன்கேணி, கருவப்பங்கேணி மற்றும் குளத்தூர் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 06 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்புஸ்குடா பகுதியிலுள்ள  காட்டுப் பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையமொன்றும் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது, 5 பரல்களில் இருந்து 4 இலட்சத்து  30,000 மில்லி லீற்றர் கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் கோடா கைப்பற்றப்பட்டு, அழிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரி அத்தியட்சகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .