Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எம்.அஹமட் அனாம் / 2018 ஜூன் 21 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓமடியாமடு பிரதேசத்தில், சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட 18 பெரல்கள், நேற்று (20) இரவு கைப்பற்றப்பட்டனவென, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஏ.சிவதர்சன் தலைமையிலான குழுவினர்களால், ஓமடியாமடு பகுதியில் நடத்தப்பட்ட இரவு பகலான ரோந்து நடவடிக்கையில் போதே, குறித்த கசிப்பு உற்பத்தி பெரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை அறிந்த கசிப்பு உற்பத்தியாளர்கள், கசிப்பு உற்பத்திப் பொருட்களையும் பெரல்களையும் விட்டுத் தப்பியோடியுள்ளனரென, பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago