Janu / 2025 ஜனவரி 29 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதேச வாலியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு தயாரிப்பு நிலையம், மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் செவ்வாய்க்கிழமை (28) மாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன் போது 23 பரல்களில் சுமார் 14 லட்சத்து 50 ஆயிரம் மில்லி லிட்டர் கோடா , 750 போத்தல்களில் 5,25,000 மில்லி லிட்டர் கசிப்பு , கசிப்பு தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் பெருமளவிலான உபகரணங்கள் மற்றும் தோனியொன்று கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரீ.எல்.ஜவ்பர்கான்

14 minute ago
36 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
36 minute ago
52 minute ago