2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கஞ்சாவுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூன் 16 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கஞ்சாவுடன் வீதியில் நடமாடிய இருவரை இன்று  வியாழக்கிழமை தாம் கைதுசெய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

விற்பனைக்காக தம்வசம் கஞ்சா வைத்திருந்த 33 மற்றும் 23 வயதான நபர்கள் இருவரும் ஏறாவூர் தைக்கா வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

33 வயது குடும்பஸ்தரிடமிருந்து 5 கிராம் கஞ்சாவும் 24 வயது இளைஞரிடமிருந்து 4 கிராம் 200 மில்லிகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர்கள் வீதிகளில் உலாவந்தவாறு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததின் பேரில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X