Suganthini Ratnam / 2016 ஜூன் 16 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கஞ்சாவுடன் வீதியில் நடமாடிய இருவரை இன்று வியாழக்கிழமை தாம் கைதுசெய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
விற்பனைக்காக தம்வசம் கஞ்சா வைத்திருந்த 33 மற்றும் 23 வயதான நபர்கள் இருவரும் ஏறாவூர் தைக்கா வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
33 வயது குடும்பஸ்தரிடமிருந்து 5 கிராம் கஞ்சாவும் 24 வயது இளைஞரிடமிருந்து 4 கிராம் 200 மில்லிகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர்கள் வீதிகளில் உலாவந்தவாறு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததின் பேரில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025