Suganthini Ratnam / 2016 ஜூன் 19 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கஞ்சாவுடன் நடமாடிய குற்றச்சாட்டின் பேரில் 27 வயதுடைய ஒருவரை மட்டக்களப்பு, ஏறாவூர் கலைமகள் வித்தியாலய வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து 5300 மில்லிகிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.
இச்சந்தேக நபர் வீதிகளில் உலாவிக்கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து குறித்த இடத்துக்குச் சென்று சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவரிடம் கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025