2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூன் 24 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கஞ்சாவுடன் வீதியில் நடமாடியதாகக் கூறப்படும்  54 வயதுடைய ஒருவரை மட்டக்களப்பு, ஏறாவூர் ரூபி முஹைதீன் கிராம வீதியில் இன்று வெள்ளிக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சந்தேக நபர் விற்பனைக்காக தம்வசம் கஞ்சாவை வைத்திருந்ததுடன், இவரிடமிருந்து 3800 மில்லிகிராம் கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர் வீதிகளில் உலாவிக்கொண்டு  கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X