2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

கடற்கரையோரம் வயோதிபரின் சடலம் மீட்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 31 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி கடற்கரையோரம்  திங்கட்கிழமை (30 ) திகதி வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கருவப்பங்கேணியைச் சேர்ந்த 89 வயதுடைய  ஆரியவன்ச விஜயரட்ணம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் ஏற்பட்ட முரண்பாடுகளையடுத்து வீட்டை விட்டு வெளியேறி வந்த குறிப்பிட்ட நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .