2025 மே 09, வெள்ளிக்கிழமை

‘கல்வி வீழ்ச்சிக்கு பொறுப்புக் கூறவும்’

பேரின்பராஜா சபேஷ்   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டுக்கான தரம் 5 புலமைப்பரீட்சையில், மட்டக்களப்பு கல்வி வலயத்தில், வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் 4.52 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக,  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்தார்.

வெளியாக்கியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் படி, மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பின்னடைவு தொடர்பாக இன்று (09) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், 2018ஆம் ஆண்டு வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் சதவீதம் 36.12 ஆகவும், 2019ஆம் ஆண்டு 31.31 சதவீதமாக காணப்படுவதோடு, மாவட்ட ரீதியில் 4.52 சதவீதத்தால் குறைவடைந்திருப்பதோடு, வலயத்தில் முன்னிலையில் இருந்த ஏறாவூர் பற்று கோட்டம் கடுமையான வீழ்ச்சியில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களில் 16ஆவது இடத்துக்கு பின்னடைவை அடைந்துள்ளமைக்கு கல்வி வலய அதிகாரிகள் வெளிப்படைத்தன்மையாகப் பொறுப்புக் கூறல் வேண்டுமெனவும் அவர் ​மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X