2025 மே 23, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி தபால் நிலையத்தை தரமுயர்த்த நடவடிக்கை

Editorial   / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி தபால் நிலையத்தை தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பதாக தபால் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்

காத்தான்குடி தபால் நிலையத்தை நவீன வசதிகளைக் கொண்ட தபால் நிலையமாக தரமுயர்த்துமாறு, அமைச்சர் எம்.எச்.எம். ஹலீமிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுத்த கோரிக்கைக்கு அமைய, மேற்படி விடயம் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு தபால் மா அதிபருக்கு, அமைச்சர் ஹலீம், நேற்று (08) பணிப்புரை விடுத்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், 1994ஆம் ஆண்டு தபால் மற்றும் தொலைத் தொடர்பு பிரதியமைச்சராக இருந்த போது காத்தான்குடியில் தபால் நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அப்போதைய யுத்த கால சூழலில் தபால் நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை மாபெரும் வெற்றியாக கருதப்பட்டதோடு, மக்களுக்கு பெரும் பயனுள்ளதாகவும் அது அமைந்திருந்தது. எனினும், அன்று முதல் இன்று வரை ஒரே தரத்தில் குறித்த தபால் நிலையம் இயங்கி வருகின்றமையால் அதனைப் பயன்படுத்துகின்ற பொது மக்கள், அரச சேவையாளர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X