Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 16 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடியில் “சிற்றிப் பொல“ எனும் வாராந்த நகரச் சந்தையொன்று எதிர் வரும் 20ம் திகதி ,காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் இன ஐக்கியத்தையும் இன நல்லிணக்கத்தையும் கருத்திற் கொண்டு அங்காடி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நீண்டநாள் வேண்டுகோளுகிணங்க இந்த வாராந்த சந்தை ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 20.07.2019. திகதி சனிக்கிழமை காலை 6 மணி முதல் காத்தான்குடி பிரதான வீதியையொட்டி டாக்டர் அகமட் பரீட் மாவத்தையில் இந்த வாராந்த சந்தை ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 மணி முதல் மாலை 6மணிவரை நடைபெறவுள்ள இந்த நகரச் சந்தையில் நாட்டில் எப்பாகத்திலும் உள்ள அனைத்து சமூகங்களையும் சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் உள்ளூர் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய முடியும்.
அதே போல், பொதுமக்கள் அனைவரும் தங்கள் அன்றாட பாவனைப்பொருட்களை மலிவு விலையில் தாங்களே இச் சந்தையில் வந்து கொள்முதல் செய்துகொள்ள முடியும்.
இதற்கான சகல ஏற்பாடுகளையும் காத்தான் குடி நகரசபை செய்வதோடு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள வியாபாரிகள் காத்தான்குடி நகரசபையின் அலைபேசி இலக்கமான 0652245925, 0770174027, 0752878286 தொடர்பு கொள்ளவும் முடியும் எனவும் அல்லது நேரடியாக காத்தான்குடி நகரசபைக்கு வந்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் காத்தான்குடி நகர சபை அறிவித்துள்ளது.
இந்த நகரச் சந்தையை காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago