Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரீ.எல்.ஜவ்பர்கான் / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிப்பாளையம் பிரதேசத்தில் இரு வீடுகள் உடைக்கப்பட்டுக் கொள்ளையிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், 8 பேர், நேற்று (24) மாலை கைது செய்யப்பட்டனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், 2 இலட்சம் ரூபாய் பணம், 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான 31 பவுண் நகைகள், டிஜிட்டல் கமெராக்கள் 2, தொலைபேசிகள் 8 உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளனவென, களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபுல் குணவர்த்தன தெரிவித்தார்.
கடந்த 22ஆம் திகதி இரவு, செட்டிப்பாளையத்திலிருந்த இரு வீடுகள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பணம், நகைகள் உட்பட இலத்திரனியல் உபகரணங்களும் கொள்ளையிடப்பட்டிருந்தன.
இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த களுவாஞ்சிக்குடிப் பொலிஸார், பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களை, அக்கரைப்பற்று, தம்பட்டை பிரதேசத்தில் வைத்து நேற்று கைதுசெய்தனர்.
அத்துடன், அவர்களிடமிருந்து நகைகளைக் கொள்வனவு செய்த 4 வர்த்தகர்களையும் கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்து 31 பவுண் தங்க நகைகளையும், வாடகைக்குப் பெறப்பட்ட நவீன காரொன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
3 hours ago
9 hours ago
27 Aug 2025
27 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
27 Aug 2025
27 Aug 2025