2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூன் 29 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து சாராய விற்பனையில் ஈடுபட்டுவந்த குற்றச்சாட்டின் பேரில் 38 வயதுடைய குடும்பப் பெண் ஒருவரை மட்டக்களப்பு, மயிலாம்பாவெளிக் கிராமத்தில் இன்று புதன்கிழமை கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.ஐ.ஏ.வஹாப் தெரிவித்தார்.

இதன்போது, 750 மில்லிலீற்றர் கொண்ட 05 சாராயப்  போத்தல்களை கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.

நீண்டகாலமாக இப்பெண் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து தமக்குத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, விசாரணை செய்து குறித்த பெண்ணைக் கைதுசெய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X