George / 2016 மே 02 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி சிகரம் கிராமத்தில் எட்டு வயது சிறுமியை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் 16 வயது சிறுவனை கைதுசெய்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார், இன்று தெரிவித்தனர்.
வைத்திய பரிசோதனைக்காக ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, மேலதிக சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட சிறுவன், சிறுமியின் மாமா முறையான உறவினர் என்றும் கடந்த ஒரு வருடகாலமாக குறித்த சிறுமியை இவ்வாறு துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago