Niroshini / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிச்நகர், மீராகேணி கிராமத்தில் நேற்று சனிக்கிழமை(17) மாலை 11 வயது நிரம்பிய இரு சிறுவர்களை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய மூவர் தலைமறைவாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவ்விடத்துக்கு சைக்கிளில் வந்த மூவர் சிறுவர்களை மடக்கிப் பிடித்து அருகிலுள்ள பற்றைக்காடுகளுக்குள் கொண்டு சென்று துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளனர்.
இதன்போது,சிறுவர்கள் கூச்சலிட்டதையடுத்து சந்தேக நபர்கள் சிறுவர்களைக் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து,சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் கிராமவாசிகளால் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago