Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 25 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன் , எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, ஆயித்தியமலை சதா சகாய அன்னைத் திருத்தலத்தின் 65ஆவது வருடத் திருவிழா, ஓகஸ்ட் 30ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
அத்திருத்தலத்தின் நவநாள் கிரியைகள் தினமும் இடம்பெற்று, மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, செப்டெம்பர் 8ஆம் திகதி காலை 7.15மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறவுள்ளது.
தினமும் மாலை 4.30 மணிக்கு திருச்செபமாலையுடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமாகி, நாளாந்த திருப்பலி தேவாலய நிர்வாகி, அடிகளார் அன்டணிடிலிமா தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படும்.
இத்திருத்தலத்தின் விசேட நிகழ்வான பாதையாத்திரை வழிபாடு, செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் காலை 5.15மணிக்கு நடைபெறும் திருப்பலியைத் தொடர்ந்து, வவுணதீவு பிரதேச வழியாகவும் அதேவேளை செங்கலடி நிக்கலஸ் தேவாலயத்தினூடாகவும் ஆயித்தியமலை சென்றடையும்.
திருநாளை முன்னிட்டு விசேட அன்னதானமும் வழங்கப்படவுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதேவேளை, மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் ஏற்பாட்டில், இந்தத் திருவிழாவுக்குத் தேவையான போக்குவரத்து, குடிநீர், பாதுகாப்பு, பொதுச் சுகாதார வசதிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago