Freelancer / 2023 ஜூன் 17 , பி.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பிரதேசத்தில் பணத்துக்காக சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 7 பேரை இன்று (17) மாலை கைது செய்துள்ளதாகவும் 6 சண்டை சேவல்கள் மற்றும் பணம் என்பவற்றை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நாவலடி பிரதேசத்தில் இன்று மாலை 6 மணியளவில் சேவல் சண்டை நடத்திவந்த பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கு சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த 6 பேருடன் சேவல் சண்டையை பார்த்துக் கொண்ட ஒருவர் உட்பட 7 பேரை கைது செய்ததுடன் 6 சேவல்களையும் ஒரு தொகை பணத்தையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் நாவலடி பிரதேசத்தைச் சேர்ந்த 26 - 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். R


26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026