Princiya Dixci / 2021 ஜூன் 15 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
சைக்கிள் ஒன்றில் வந்த நபரொருவர், ஓர் இடத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு, அங்கிருந்த மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்றுள்ள சம்பவமொன்று, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லாப் பிச்சை வீதியில் நேற்றிரவு ((14) இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனையைச் சேர்ந்த நபரொருவரின் EP –BCV 8533 எனும் இலக்கமுடைய கறுப்பு நிற பல்சர் மோட்டார் சைக்கிளே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைவிட்டுச் சென்றுள்ள சைக்கிளைக் கைப்பற்றியுள்ள வாழைச்சேனை பொலிஸார், மோட்டார் சைக்கிள் திருடனைத் தேடி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .