Editorial / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் ஆட்சியினை, தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளதையடுத்து, த.தே.கூட்டமைப்பின் களுதாவளை வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஞானமுத்து யோகநாதன் தவிசாளராகவும், பிரதி தவிசாளராக த.தே.கூட்டமைப்பின் கோட்டைக் கல்லாறு வட்டாரத்தில் வெற்றிபெற்ற திருமதி கனகராசா ரஞ்சினி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முதல் அமர்வு, இன்று காலை, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் ஆரம்பமானது.
இன்றைய அமர்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் 10 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் 04 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 02 உறுப்பினர்களும், தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் 2 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 2 உறுப்பினர்களும், மற்றும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி உறுப்பினர் ஒருவருமாக மொத்தம் 21 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதனடிப்படையில், தவிசாளரை தெரிவுசெய்யும் வகையிலான திறந்த வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. தவிசாளருக்கான வாக்கெடுப்பில், ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி தவராணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஞானமுத்து யோகநாதன் ஆகியோருக்கும் இடையில் நிலவிய போட்டியின் அடிப்படையில், 11 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 6 உறுப்பினர்கள் எதிராகவும், நான்கு பேர் நடுநிலையாகவும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago