Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் பிரதான வீதி கடைத்தெருவில் சாரதி பயிற்சி நிலையம் ஒன்றுக்குள் கூரை பிரித்து உள் நுழைந்த திருடன் ஒருவருன் சி.சி.டி.வி கமெராவையும் பொருட்படுத்தாது, கமெராவை அவதானித்தவாறே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது பதிவாகியிருப்பதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில் பயிற்சி நிலையத்தின் அலுமாரிக்குள் வைக்கப்பட்டிருந்த அலைபேசியொன்றும் 40,000 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக, சாரதி பயிற்சி நிலையத்தின் உரிமையாளர் வெள்ளக்குட்டி தாஹிர், ஏறாவூர் பொலிஸில் முறையிட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ள பொலிஸார், சி.சி.டி.வி கமெராவில் பதிவாகியுள்ள திருடனை அடையாளம் காண உதவுமாறு, பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.
கூரையைப் பிரித்து பயிற்சி நிலையத்துக்குள் உள் நுழைந்த திருடன், லாவகமாகவும் பதற்றமின்றியும் அங்கிருந்த அலுமாரியை அமைதியான முறையில் துளாவி ஆராய்ந்து பணத்தையும் பொருட்களையும் தேடுவதும் அவ்வப்போது சி.சி.டி.வி கமெராவை நோட்டமிடுவதும் கமெராவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை சந்தேகத்தின் பேரில் எவரும் கைதுசெய்யப்படவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
25 minute ago
32 minute ago