2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

திருடர்கள் தொலைவில் இல்லை

Freelancer   / 2023 நவம்பர் 16 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட பல திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதனைக் கருத்தில் கொண்டு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களை அவதானத்துடன் இருந்து கொள்ளுமாறு அறிவுறுத்துதல் விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வறுமை காரணமாக பரவலாக திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

திருடர்கள் தொலைவில் இல்லை உங்களுக்கு நன்கு தெரிந்தவர்களாகவும் ஏன் உங்களது உறவினர்களாகவும் இருக்கலாம் எனவே எப்போதும் அவதானமாக இருங்கள் என்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும், ஒலிபெருக்கி அறிவிப்பு ஊடாகவும் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X