Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூன் 07 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு தலைமையப் பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி இருந்து கசிப்பைத் தயாரித்து, பல்வேறு பகுதிகளுக்கு நீண்டகாலமாக விநியோகித்து வந்த வியாபாரி உட்பட மூவர், நேற்று (06) கைதுசெய்யப்பட்டனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து 100 லீற்றருக்கும் மேற்பட்ட கசிப்பையும் உபரணங்களையும் மீட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மட்டக்களப்பு தலைமையகப் பொறுப்பதிகாரி ஏ.நாகவத்தையின் வழிகாட்டலில், பொலிஸ் புலனாய்வுப் பிரிவு சார்ஜன்ட் ஏ.ஏ. ஜெமில் தலைமையிலான பொலிஸ் குழுவினர், சம்பவ தினத்தன்று, கருவப்பங்கேணி பிரதான வீதியிலுள்ள வீடொன்றைச் சுற்றுவளைத்துச் சோதனையிட்டனர்.
இதன்போது, அவ்வீட்டின் நிலப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பையும், அதைத் தயாரிக்கும் உபகரணங்களையும் மீட்டதுடன், கசிப்பு வியாபாரி உட்பட மேற்படி மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.
நீண்டகாலமாக கசிப்பை உற்பத்தி செய்து, மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, கரடியனாறு, வவுணதீவு, வாகரை போன்ற பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்துள்ளதாக, பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
10 May 2025
10 May 2025