Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எஸ்.எம். ஹனீபா
மட்டக்களப்பு, கல்முனையில் அமைந்துள்ள சர்வோதய அபிவிருத்தி நிதிக் கம்பனியின் உதவி முகாமையாளரான பெண்ணொருவரை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை தொடர்ந்து மீண்டும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக், இன்று திங்கட்கிழமை (22) உத்தரவிட்டார்.
கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி, காரியாலயத்துக்குச் சென்று கடமையாற்றிக் கொண்டிருக்கும் போதே இக்கொலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வருகின்றது. குளோரி வீதி நற்பிட்டிமுனை, கல்முனையைச் சேர்ந்த ராஜேஸ்வரன் சுலக்ஷனா (வயது 33) என்ற தாய் ஒருவரே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago