2025 மே 13, செவ்வாய்க்கிழமை

படுகாயங்களுக்குள்ளான சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Niroshini   / 2016 மார்ச் 01 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மாடிப்படியிலிருந்து விழுந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி  சிகிச்சை பலனின்றி இன்று செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி காத்தான்குடி 6ஆம் குறிச்சி அமானுல்லாஹ் வீதியில் வசிக்கும் எம்.எஸ்.பாத்திமா சாறா(07) என்ற சிறுமி, அயல் வீட்டிலுள்ள மாடிப்படியில் ஏறிக் கொண்டிருந்த போது தவறி விழுந்துள்ளார்.

இதில் படுகாயங்களுக்குள்ளான சிறுமி காத்தான்குடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X