Niroshini / 2015 டிசெம்பர் 17 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
சமுதாய அடிப்படையிலான அமைப்புக்களை பலப்படுத்துவதற்கான வாழ்வின் எழுச்சி முகாமையாளர்கள் மற்றும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சி பட்டறை மண்முனை தென்எருவில்பற்று பிரதேச செயலகத்தில் இன்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வாழ்வின் எழுச்சித் திட்ட முகாமையாளர் எம். உதயகுமார், வி.வரதராஜன் அகியோர் கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினர்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வாழ்வின் எழுச்சித்திட்ட முகாமையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் இப் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர்.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025