2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பலசரக்கு கடைகளில் திருட்டு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 26 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள இரண்டு பலசரக்குக் கடைகள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி மத்திய வீதியிலுள்ள பலசரக்குக் கடையிலும் அரபிக்கலாசாலை வீதியிலுள்ள பலசரக்குக் கடையிலும் பிஸ்கட் பைக்கட்டுகள், மீள்நிரப்பு அட்டைகள், பால்மா பைக்கட்டுகள் உள்ளிட்டவை திருட்டுப் போயுள்ளன.

இந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் அக்கடைகளின் உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இந்நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X