2024 மே 01, புதன்கிழமை

பாரிய விபத்து ; சாரதி காயம்

Janu   / 2024 ஏப்ரல் 02 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் பகுதியில், சுற்றுலாப்பிரயாணிகளை ஏற்றும் கெப் ரக வாகனமொன்று வேககட்டுப்பாட்டை இழந்து வீதியருயிலிருந்த மின்கம்பத்தில் மோதி  விபத்துக்குள்ளான  சம்பவம்  செவ்வாய்கிழமை (02) இடம்பெற்றுள்ளது .

இதன்போது குறித்த  வாகனத்தின் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன்  அவர் காயங்களுக்குள்ளான நிலையில் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் 
சாரதியின் நித்திரை கண்கலக்கமே  இவ் விபத்திற்கு  காரணம்  எனவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

இதனால்  இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான 4  மின்கம்பங்கள் உடைந்து முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், உரிய கெப் ரக வாகனமும் பாரிய சேதத்திற்குள்ளாகியதாக  தெரியவந்துள்ளது .

மேலும்  இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

வ.சக்தி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .