2025 மே 10, சனிக்கிழமை

பிரதேச அபிவிருத்தி வங்கியின் கிழக்கு மாகாணத்துக்கான அலுவலகம் திறப்பு

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாடிக்கையாளர்களின் நலன் கருதி, பிரதேச அபிவிருத்தி வங்கியின் கிழக்கு மாகாணத்துக்கான அலுவலகத் திறப்பு விழா, இன்று (19) வங்கியின் தலைவர் சட்டத்தரணி சுஜித் பிரசன்ன காரியவசத்தின் பிரதம பங்கு பற்றலுடன், வங்கியின் பொது முகாமையாளரும் பிரதான (பதில்) நிறைவேற்று அதிகாரியுமான தெ.குகன் தலைமையிலும் மட்டக்களப்பில் நிகழ்வுகள் நடைபெற்றன.  

 கிழக்கு மாகாண அலுவலகம், மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம், மட்டக்களப்பு இரண்டாவது கிளை வளாகம் ஆகியவற்றை இணைத்ததாக அமைந்துள்ள இவ் அலுவலகத்தின் திறப்பு விழா நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து கிளைகளின் முகாமையாளர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.  

 இதன்போது, கிழக்கு மாகாணத்துக்கான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதுடன், உத்தியோகபூர்வமாக வங்கி நடவடிக்கைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன. 

 2011ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் 19ஆம் திகதி மட்டக்களப்பில் பணிகளை ஆரம்பித்த பிரதேச அபிவிருத்தி வங்கி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களின் வருமான மேம்பாட்டுக்கான பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X