2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

பெண்களுக்கான மனிதாபிமான உதவி

Freelancer   / 2023 ஜூன் 20 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் எஸ் எம் நூர்தீன் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் Save the Children நிறுவனத்தின் மனிதாபிமான செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன்  தலைமையில் திங்கட்கிழமை(19)
மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.



மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகங்களில் இருந்து  6000 பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கொடுப்பணவு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.


இதற்கான பயனாளர் தெரிவு மற்றும் தரவு திரட்டல் பிரதேச செயலகங்களினூடாக இடம்பெற்று இறுதியாக மாவட்ட செயலகத்தின் விசேட குழுவினால் தெரிவுசெய்யப்படும்.

இச் செயற்திட்டத்தின் நிதி  அனுசரணை UNFPA மற்றும் Save the Children வழக்க  உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X