Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 13 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக், வடிவேல் சக்திவேல், ஒலுமுதீன் கியாஸ்
பிரதேச மக்களின் நீண்ட கால வேண்டுகோளை கருத்திற்கொண்டு, பொத்துவில் மத்திய கல்லூரியை, தேசிய கல்லூரியாகத் தரமுயர்த்த ஏற்ற ஒழுங்குகளைச் செய்யுமாறு, மத்திய கல்விமைச்சுக்கு அறிவித்துள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.டி.எம். அஸங்க அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநரின் செயலாளர், மத்திய கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“பொத்துவில் மத்திய கல்லூரியைத் தேசிய கல்லூரியாகத் தரமுயர்த்துமாறு, மாகாணக் கட்டமைப்புக் குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை, மாகாணக் கல்விப் பணிப்பாளர், தொடர்பான அதிகார மட்டம், மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் அங்கிகரித்துள்ளார்கள்.
“எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை இந்துக் கல்லூரி, செங்கலடி மகா வித்தியாலயம், களுதாவளை மகா வித்தியாலயம் ஆகிய மூன்று தமிழ்ப் பாடசாலைகளையும் உடனடியாகத் தரமுயர்த்துமாறு, கல்வி அமைச்சுக்கு சிபாரிசு செய்து கடிதம் ஒன்றை, செயலாளர் ஊடாக, கிழக்கு மாகாண ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார்.
5 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
4 hours ago
6 hours ago