2025 மே 01, வியாழக்கிழமை

பொலிஸாரின் ஒத்துழைப்பில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Editorial   / 2020 ஜூன் 21 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின்கீழ், டெங்கு   நுளம்புகள்   பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில்  தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இனங் காணப்பட்ட பகுதிகளில்  டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

மட்டிக்கழி  கிராம சேவையார் பிரிவுக்குட்பட்ட  மீன்சந்தை, சிறுவர் பூங்கா ஆகிய  பகுதிகளை துப்புரவு  செய்யும் சிரமதான பணிகள் இன்று  (21) முன்னெடுக்கப்பட்டன.  

மட்டக்களப்பு பொலிஸ்   நிலைய   பொறுப்பதிகாரி பி.கே.ஹெட்டிஹாராச்சியின்  வழிகாட்டலின் கீழ்,  மட்டக்களப்பு  பொலிஸ்  உத்தியோகத்தர்கள் , கதிரொளி விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் , மீனவர்கள், கோவில்  நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர்,  சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .