Freelancer / 2023 ஜூன் 13 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்

மட்டக்களப்பு வாழைச்சேனையில் 80 கிராம் ஹரோயின் போதைப் பொருள், கஞ்சா மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட 3 பேர் உட்பட 6 பேரை திங்கட்கிழமை (12) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து திங்கட்கிழமை (12) 80 கிராம் ஹரோயின் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் 3 பேரை கைது செய்தனர். அதேவேளை கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை 450 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் கைது செய்தனர்
இதனை தொடர்ந்து 12 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பை மீட்டதுடன் இவ்வாறு வெவ்வேறு சட்டவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்தள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
34 minute ago
39 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
39 minute ago
17 Dec 2025
17 Dec 2025