2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மாணவி மீதான துஷ்பிரயோகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 25 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலையொன்றில் மாணவி ஒருவர் ஆசிரியரினால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமையைக் கண்டித்து அப்பாடசாலைக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்ட இடத்துக்கு வந்த மண்முனை வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ரி.சுகுமாரனும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஜே.ஏ.ஹெட்டியாராச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், 'குறித்த ஆசிரியருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதற்கு உடந்தையாக அதிபர் உள்ளதாகவும் அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள்  இருவரும் எந்தப் பாடசாலையிலும் கடமையாற்ற முடியாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

இதன்போது தெரிவித்த மண்முனை வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ரி.சுகுமாரன், 'இந்தச் சம்பவம்  தொடர்பில் உடனடியான விசாரணை நடத்தப்படும். குறித்த ஆசிரியர் மீது குற்றம் நிரூபிக்கப்படுமாயின், அவர் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

குறித்த ஆசிரியர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுமென மட்டக்களப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஜே.ஏ.ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X