2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மாவீரர் தின நிகழ்வுகள்

Sudharshini   / 2015 நவம்பர் 28 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய மன்றத்தின் ஏற்பாட்டில் மாவீரர் தின நிகழ்வுகள், மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள நாடாருளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (27) மட்டக்களப்பில் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாவீரர்களின் நினைவாக ஈகச்சுடர் ஏற்றபட்டதுடன் ஒரு நிமிடம் மௌ அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X