Suganthini Ratnam / 2016 ஜூன் 24 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துறைநீலாவணை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில்; தீ மிதிப்பு வைபவத்தில் கலந்துகொள்ள வந்த மூன்று பக்தர்களின் தங்கச்சங்கிலிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை திருட்டுப் போயுள்ளன.
இக்கோவிலில் சன நெரிசல் காணப்பட்ட நிலையிலேயே இம்மூவரின் தங்கச்சங்கிலிகளும் திருட்டுப் போயுள்ளதாகவும் இது தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
துறைநீலாவணையைச் சேர்ந்தவர்களான 4 பவுண், 2 பவுண் மற்றும் ஒரு பவுண் தங்கச்சங்கிலிகளே திருட்டுப் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025