2025 மே 12, திங்கட்கிழமை

மகாத்மா காந்தியின் 68 ஆவது சிரார்த்த தினம்

Sudharshini   / 2016 ஜனவரி 30 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன், வா.கிருஸ்ணா

மகாத்மா காந்தியின் 68 ஆவது சிரார்த்த தினம்,  மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில்  இன்று சனிக்கிழமை (30) மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் அமைந்துள்ள காந்தியின் சிலைக்கு மாலையணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

காந்தி சேவா சங்கத்தின் உப தலைவர் சி. குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபையின் பிரததித் தவிசாளர் பிரசன்னா இந்திரக்குமார், மட்டக்களப்பு மாவட்ட சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் தலைவர் ஏ.எல்.எம். மீராஸாகிப் மற்றும் காந்தி சேவா சங்கச் செயலாளர் கதிர் பாரதிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X