Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக நடுத்தர நீர்ப்பாசன குளங்கள் பெருமளவில் வற்றிவிட்டதாக மாகாண நீர்ப்பாசன திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதி பணிப்பாளர் எம்.வடிவேல் தெரிவித்தார்.
இம்மாவட்டத்தில் 14 நடுத்தர நீர்ப்பாசன குளங்கள் உள்ளன.அவற்றுள் செங்கலடி பிரதேச செயலகப்பிரிவில் 5 குளங்களும் ஏனைய இடங்களிலும் 9 குளங்களும் உள்ளன.இவற்றில் மதுரங்கேணி பெரிய குளம், மகிழடித்தீவு குளம்,பழுகாமம் குளம், சேவகப்பற்று குளம், போரதீவு குளம் மற்றும் மகிழூர் குளம் ஆகிய குளங்கள் முற்றாக வற்றிவிட்டன.
கடுக்காமுளை குளம் தற்போது 5 அடி தண்ணீரை மாத்திரமே கொண்டுள்ளது.இதேவேளை, புழுகுணாண, அடைச்சகல் போன்ற குளங்களும் பெருமளவில் வற்றிவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த குளப்பிரதேசங்கள் வரட்சி காரணமாக பெரிதும் வரண்டு காணப்படுவதுடன் வயல் நிலங்களும் வரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago