Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 18 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
இலங்கை மின்சார சபையின் திருத்தப்பணிகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை வியாழக்கிழமை முதல் மூன்று தினங்களுக்கு 9 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மின்அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க,நாளை வியாழக்கிழமை திருமலை வீதி (பொலிஸ் நிலைய பகுதி) , அருணகிரி வீதி, பூம்புகார், லொயிட்ஸ் அவன்யு, ஒலிவ் லேன், டயஸ் வீதி, சின்னஊறணி, பெரியஊறணி, இருதயபுரம், கொக்குவில், ஞானசூரியம் சதுக்கம் சவுக்கடி, தளவாய், புண்ணைகுடா ஆகிய இடங்களிலும்
வெள்ளிக்கிழமை(20) மண்டூர், கணேசபுரம், சங்கர்புரம், தம்பளவத்தை, ராணமடு ஆகிய இடங்களிலும்
சனிக்கிழமை (21) பிரதான வீதி, காந்தி வீதி, மத்திய வீதி, புனித அந்தோனியார் வீதி, நீதிமன்ற வளாகம், மாநகர சபை வளாகம், பிரதேச செயலக வளாகம், ஆஸ்பத்திரி வீதி மற்றும் வாழைச்சேனை பொலிஸ் பகுதி, கருவாக்கேணி, கிண்ணயடி, கிரான், கோரகல்லிமடு, சந்திவெளி, பாலயடிதோனை, பறங்கியாமடு, முறக்கொட்டான்சேனை, சித்தாண்டி, மற்றும் புலிபாய்ந்தகல் ஆகிய இடங்களிளும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago