2025 மே 09, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் பெரும்போக நெல் விதைப்பு ஆரம்பம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு  மாவட்டத்தில்  மானாவாரி (வான் மழையை நம்பிய விவசாயச் செய்கை) பயிர்ச்செய்கை விதைப்பு நடவடிக்கை  தற்போது  ஆரம்பமாகியுள்ளதாக விவசாயிகளும் விவசாய அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

இதில்,  சிறிய நீர்ப்பாசனம், மானாவாரி பயிர்ச்செய்கை, உன்னிச்சைத் திட்டம், வலதுகரை - இடதுகரை வாய்க்கால்கள் ஊடான பயிர்ச்செய்கை  மூலம் இவ்வருடன் 31,230 ஏக்கர் நெற் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

உன்னிச்சைத் திட்டத்தின் கீழ், வலதுகரை வாய்க்கால் விஸ்தீரணம், ஆற்றுப்பாய்ச்சல், இடதுகரை வாய்க்கால் போன்றவற்றில் மொத்தமாக 15,179 ஏக்கரும் சிறிய நீர்ப்பாசனம், மானாவாரி பயிர்ச்செய்கை திட்டத்தின் கீழ் 16,051 ஏக்கரும் மேட்டு நில பயிர்வகைகளும் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இப்பிரதேசத்தில் பொருத்தமான காலத்தில் மழை இல்லாத போதிலும் அவ்வப்போது  ஓரளவு மழை பெய்துள்ளது. இதனை நம்பி தற்போது விவசாயிகள் வயல் நிலங்களில் விதைத்து வருவதாகவும்,

கடந்த சிறுபோகத்தின் இறுதிக்காலப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் பல விவசாயிகள் இந்த நெற்செய்கையில் பெரும் நட்டத்தை எதிர்கொண்டதாகவும் குறிப்பிடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X