Editorial / 2018 மார்ச் 05 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக எம்.என்.எஸ்.மெண்டிஸ், தனது கடமைகளை, இன்று (05) பொறுப்பேற்றுக் கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகக் கடமையாற்றிய சமன் எட்டவர, கொழும்பு வடக்குப் பகுதிக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, அந்த இடத்துக்கு கம்பளை பிரதேசத்துக்கான பொலிஸ் அத்தியட்சகராகக் கடமையாற்றிய எம்.என்.எஸ்.மெண்டிஸ், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக (எஸ்.பி) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது கடமைகளை, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டதுடன், அவருக்கு பொலிஸாரின் அணி வகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.
இந்த வைபவத்தில் சமயப் பிரமுகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், மட்டக்களப்புத் தலைமையப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 75ஆவது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago