Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் அகழ்வு தொடர்பில் புதிய நடைமுறையைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (22) மாலை நடைபெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்புத் தொடர்பில் ஆராயும் கூட்டத்தின்போதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக இயற்கை வளங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார். அத்துடன், பட்டிப்பளைப் பிரதேசத்தில் பெருமளவில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.
இதன்போது தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், சில பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக வயல் நிலங்களும் ஆறுகளும் பாதிக்கப்படுகின்றன. மேலும், நீர்ப்பாசனத்துக்குரிய குளங்களில் அதிகளவில் மணல் அகழ்வு இடம்பெறுவதால், அக்குளங்கள் பாதிக்கப்படும் அதேவேளை, நீர்ப்பாசனத் திணைக்களங்களுக்குரிய வீதிகளும் பாதிக்கப்படுகின்றன.
ஆகவே, ஆறுகளில் மணல் அகழ்வை மேற்கொள்ளும் பொறுப்பை நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் ஒப்படைக்கும்போது, அவர்கள் இதைச் சரியாகச் செய்யமுடியும்' என்றார்.
இதன்போது, கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், எழுவான்கரைப் பிரதேசத்திலுள்ள பிரதேச சபைகள் வருமானம் ஈட்டும் சபைகளாகவுள்ள நிலையில், படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள பிரதேச சபைகள் மிகவும் குறைந்த வருமானம் ஈட்டுகின்றன. இதன் காரணமாக மணல் விற்பனை உரிமையை பிரதேச சபைகளுக்கு வழங்கும்போது, அது அச்சபைக்கு வருமானம் ஈட்டும் துறையாக இருக்கும்' என்றார்.
இது தொடர்பில் புவிச்சரிதவியல் சுரங்க அகழ்வுப் பணியகம் உரிய பணியை முன்னெடுக்கவில்லையென பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டினர். புவிச்சரிதவியல்; சுரங்க அகழ்வுப் பணியகம் மணல் அகழ்வுக்கான அனுமதி வழங்குகின்றபோதிலும், அதைக் கண்காணிப்பதற்குத் தவறியுள்ளதென இக்கூட்டடத்தில் அவர்கள் கூறினர்.
எனவே, இது தொடர்பில் புவிச்சரிதவியல் சுரங்க அகழ்வுப் பணியக அதிகாரிகள், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள்;, உள்ளூராட்சி ஆணையாளர், பிரதேச சபைச்; செயலாளர்களுடன் ஆராய்ந்து புதிய நடைமுறை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago