Suganthini Ratnam / 2016 ஜனவரி 19 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, சித்தாண்டிப் பகுதியிலுள்ள சந்தனமடு ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து நகரப் பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் மூன்று பேரை திங்கட்கிழமை (18) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்துக்குச் சென்று மணல் ஏற்றப்பட்ட மூன்று உழவு இயந்திரங்களுடன் அதன் சாரதிகளையே கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட மணல் ஏற்றிய உழவு இயந்திரங்கள் ஏற்hவூர் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago