2026 மார்ச் 16, திங்கட்கிழமை

மனித நுகர்வுக்கு ஒவ்வாத மீன்கள் கைப்பற்று

Janu   / 2026 ஜனவரி 20 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி மீன் சந்தையில் செவ்வாய்கிழமை (20) அன்று மனித நுகர்வுக்கு ஒவ்வாத பழுதடைந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட 16Kg கீரி மீன்கள் கைப்பற்றப்பட்டு பொதுச் சுகாதார பரிசோதகர்களால் உடனே அழிக்கப்பட்டன.

களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் மூலம் இந்த பழுதடைந்த மீன்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதன் போது வியாபாரிக்கு கடுமையான எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X