2025 மே 09, வெள்ளிக்கிழமை

மருந்தகத்தில் கொள்ளை; இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 06 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, ஏறாவூர் நகரிலுள்ள மருந்தகமொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் எம்ஐ.எம்.றிஸ்வி, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை உத்தரவிட்டுள்ளார்.
 
கடந்த மாதம் 22ஆம் திகதி இரவு இந்த மருந்தகத்தின் கூரை வழியாக நுழைந்தவர்கள் மருந்துப் பொருட்கள், சுமார் 520,000 ரூபாய் பணம் மற்றும் 8,000, 5,000, 10,000 ரூபாய் பெறுமதியான 03 காசோலைகளை கொள்ளையிட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் மேற்படி இருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X