2024 மே 01, புதன்கிழமை

மாணவியை கடத்திய இளைஞன் கைது

Editorial   / 2024 ஏப்ரல் 15 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர் கான்   

14 வயது மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயது இளைஞர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் திங்கட்கிழமை (15) காலை கைது செய்துள்ளனர் .

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கிரான்குளத்தைச் சேர்ந்த மேற்படி மாணவியை காதல் என்ற பெயரில் கடத்திச் சென்ற திருகோணமலை குற்றவெளியைச் சேர்ந்த 17 வயது இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

 கடத்திச் சென்று கொழும்பில் சில நாட்கள் தங்கி இருந்தபின் மீண்டும்  சொந்த இடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (14)  திரும்பி வீட்டில் தங்கியிருப்பதாக  கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸார்  இளைஞனை கைது செய்துள்ளனர் 

  குற்றவெளியிலிருந்து கிரான் குளத்துக்கு ஏப்ரல் 9ஆம் திகதி வந்த மேற்படி காதலன் குறித்த மாணவியை கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளார் கொழும்பிலிருந்து மீண்டும் ஞாயிறுக்கிழமை (14) ஊர் திரும்பிய நிலையில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கைது செய்யப்பட்ட இளைஞர்  நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

குறித்த மாணவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .